ஆச்சாரியர் தங்கியிருந்த ஒரு பழைய காலத்து மடம் ஒன்றில் ஒரு உளுத்தப் போன உத்திரம் இருந்தது. ஒட்டுக் கட்டிடம், நடுவில் முற்றம். முற்றத்திலே செடிகள் வைப்பதற்காக தளம் போடாமல் மண்தரையாகவே பாதி இடம் இருந்தது. ரீங்காரம் பண்ணியபடி பறக்கின்ற பெரிய வண்டுகள் உத்திரத்தில் துளையிட்டு அந்தத் துளையில் வாசம் செய்தன. சில சமயம் அவை முற்றத்தில் வந்து புரளும். அங்கு கட்டை எறும்புகள் சாரிசாரியாய் போய்க் கொண்டிருக்கும். இந்த வண்டு வந்து தலை குப்பிற விழுந்து புரள முயற்சி செய்து கொண்டிருக்கும் போது 10, 15 எறும்புகள் இந்த வண்டைப் பிடித்து வெடுக் வெடுக் என்று அதன் காலைப் பிடித்து கடிக்கும். வண்டு துடிக்கும். ஐயோ பாவம் என்று எண்ணி வண்டை புரட்டிப் போட்டால் அது உடனே இந்த எறும்புகளைப் பிடித்து சாப்பிட ஆரம்பித்து விடுமாம். ஆச்சார்யர் பதறிவிடுவாராம். இது உபகாரமா, அபகாரமா ? அப்போதுதான் முடிவு செய்தாராம். ஒன்றுமே செய்யாமல் சும்மா இருப்பது என்று. ஆனால் உலகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமே ? என்ன செய்வது ?யாருக்கும் உபத்திரபம் இல்லாத ஒன்றைச் செய்ய வேண்டும் . என்ன செய்யலாம். யோசனை பண்ணினார் ஆச்சார்யர்.
ஒரு முடிவுக்கு வந்தார்.
இந்த சும்மா இருக்கும் விஷயத்தையே உலகுக்கு சொல்லிவிடுவோம். யாருக்கும் உபத்திரபம் இல்லாமல் போகும் என்று முடிவு செய்தார். அதையே சொன்னார்
உபகாரமோ, அபகாரமோ, நல்லதோ, பொல்லாததோ, எப்படி எப்படி நடக்கிறதோ அப்படியே நடக்கட்டும். நாம் சும்மா இருந்தால் போதும். சும்மா இருப்பதுதான் நாம் பிறருக்கு செய்யும் உபகாரம்
.
அவர் சொல்லிவிட்டார். வாஸ்தவத்தில் சும்மா இருப்பதுதான் ரெம்பக் கஷ்டம்
.
அவர் சொல்லிவிட்டார். வாஸ்தவத்தில் சும்மா இருப்பதுதான் ரெம்பக் கஷ்டம்
No comments:
Post a Comment