பரமேசுவரன் மீது ஒரு சுலோகம் இருக்கிறது. அதில்பக்தர் இப்படிச் சொல்கிறார்.
"திரிபுர சம்ஹாரம் செய்த பிரபுவே! நீ என்னுடையஇரண்டு அபராதங்களை க்ஷமிக்க வேண்டும். அந்தஇரண்டு அபராதங்கள் என்ன? போன ஜன்மத்தில்நான் உன்னை நமஸ்கரிக்காதது ஓர் அபராதம்.வரப்போகிற ஜன்மத்தில் உன்னை நான்நமஸ்கரிக்காமல் இருக்கப்போவது இரண்டாவதுஅபராதம். போன ஜன்மத்தில் நான் உன்னைநமஸ்கரிக்கவில்லை என்று எப்படித் தெரிகிறதுஎன்கிறாயா? எனக்கு இப்போது ஒரு ஜன்மம்ஏற்பட்டிருப்பதிலிருந்தே அது தெரிகிறது. போனபிறவியில் உன்னை நமஸ்கரித்திருந்தால்அப்போதே எனக்கு மோக்ஷம் கிடைத்திருக்கும். இந்தமறு பிறவியே ஏற்பட்டிராது. அது சரி, அடுத்தஜன்மாவில் நமஸ்கரிக்கமாட்டேன் என்றது ஏன்தெரியுமா? இந்த ஜன்மாவில் உன்னை நமஸ்கரித்துவிட்டேன் அல்லவா? அதனால் நீ இனி எனக்குப்பிறவியே தரமாட்டாய். மறு ஜன்மாவேஇல்லாதபோது அப்போது உனக்குச் செய்யவேண்டிய நமஸ்காரம் மட்டும் எப்படி இருக்கும்?இப்படியாக போன ஜன்மா, வருகிற ஜன்மாஇரண்டிலும் உன்னை வணங்காத குற்றத்தைமன்னித்துவிடு."
இந்த ஸ்லோகத்திலிருந்து என்ன ஏற்படுகிறது? மனப்பூர்வமாக ஈஸ்வரனை நமஸ்காரம் செய்துவிட்டால்போதும், அவர் நம்மை ஜனன மரணசக்கரத்திலிருந்து விடுவித்து விடுவார். நம்பாவங்களையெல்லாம் போக்கி முக்தி தந்துவிடுவார். இந்த ஸ்லோகத்தைச் சொன்னவர் கவித்வசமத்காரத்தில் பாடியவரில்லை. அவர் பழுத்தஅநுபவசாலி, எனவே அவரது வார்த்தையைபரிபூர்ணமாக நம்பி நாமும் ஈசுவரனிடத்தில்சரணாகதி என்று விழுந்து நமஸ்காரம்பண்ணுவோம். நமஸ்கரித்தால் மோக்ஷம் நிச்சயம்என்ற நம்பிக்கையுடன் பண்ணினால் அப்படியேகிடைக்கும்! சந்தேகமில்லை.
நமஸ்காரம் செய்வதைத் தண்டம் சமர்ப்பித்தல்என்பார்கள். தண்டம் என்றால் கழி அல்லது கோல்என்று அர்த்தம். கையில் பிடித்திருக்கிற ஒருகோலை விட்டுவிட்டால் அது அப்படியேதடாலென்று கீழே விழுந்துவிடும். அப்படியே இந்தசரீரத்தை நமதல்ல, இது ஈஸ்வரனுடையது என்கிறஎண்ணத்துடன் கீழே போடுவதுதான் நமஸ்காரம். நம்சரீரம் வெறும் மரக்கோல்தான். உதவாத பொருளை'அது தண்டமாகி விட்டது' என்கிறோம். அப்படிதண்டமான வஸ்துதான் நம் சரீரம். இதைத்தூக்கிப்பிடித்து நிறுத்தி வைத்து ஆட்டுகிற சக்திஈஸ்வரன் கொடுத்ததே ஆகும். இந்த உடம்பை ஏதோநாமே தாங்கி நடத்துகிறோம் என்ற எண்ணத்தைஒழித்துவிட்டு, அதாவது அகங்காரத்தைவிலக்கிவிட்டு, அதற்கு அடையாளமாக ஈசுவரன்முன் இந்தச் சரீரத்தைக் கீழே போடவேண்டும்.அதுதான் தண்டம் சமர்ப்பிப்பது. ஜுரம் வந்தால் நம்சரீரத்தால் நிற்கவும் நடக்கவும் முடிகிறதில்லை.இந்த ஜன்மாவே பெரிய ஜுரமாக வந்திருக்கிறது.இதிலிருந்து நம்மைக் கடைத்தேற்றுவதற்காக,நமக்கு வந்திருக்கிற சம்ஸார ஜுரத்தைபுரிந்துகொண்டு, அதற்கு அடையாளமாகஸ்வாமியின் முன் தண்டாகாரமாக விழுந்துநமஸ்கரிக்க வேண்டும்.
'நாம் செய்கிறோம்' என்கிற எண்ணம் போய்விட்டால்அதுவே ஸதாகால நமஸ்காரம். அந்த அநுபவம்நமக்கு ஸித்திக்காத போதிலும் ஈஸ்வரசந்நிதியிலாவது அப்படி பாவித்து வணங்கித்தரையோடு, தரையாக எளிமையாகக் கிடக்கவேண்டும். இங்கே வணங்கிவிட்டால், அப்புறம்வெளியே எங்கேயும் வணங்காமல் இருக்கலாம். 'பொறுப்பை உன்னிடமே பூரணமாகக் போட்டேன்'என்பதற்கு அடையாளம் சரீரத்தைத் தரையில்போடுவது, கொஞ்சம் பொறுப்பை நமக்கு என்றுவைத்துக் கொண்டால்கூட ஸ்வாமி தம் பங்கைக்குறைத்துக் கொண்டு விடுவார். இதில்அரைகுறைக்கு இடமே இல்லை. நம்முடையநல்லது பொல்லாதது அவ்வளவும் அவர் விட்டபடிஎன்று சகல பொறுப்பையும் அவரிடம் தள்ளுவதற்குவெளி அடையாளமாக உடம்பைத் தரையில் தள்ளிநமஸ்காரம் பண்ணவேண்டும். அப்படிச் செய்தால்நம் பாரம் அனைத்தையும் கிருபா சமுத்திரமமானஸ்வாமியே ஏற்று அநுக்கிரகிப்பார்.
No comments:
Post a Comment