Saturday, October 11, 2014

அன்பு பற்றி........

தாத்தா   நீ  அன்பு  பற்றி சொன்னதை  நான்  ஸ்கூலில்  எல்லோருக்கும்  சொன்னேன் எங்க டீச்சர்  அதை கேட்டு  எல்லா  வகுப்புலேயும்   கூட  சொல்லி  மகிழ்ந்தாங்களாம்.  

''இன்னும் அதுபோல்   சொல்றியா தாத்தா''   கோபு   தாத்தாவின்  முகவாயை பிடித்து  கெஞ்சினான்  அவர்  அருகில் அமர்ந்தான்.  தாத்தா  தொண்டையைக் கனைத்துக்கொண்டார்.  

கோபு ,  இது  எத்தனையோ   ஆயிரம்  ஆண்டுகளுக்கு  முன்பு நடந்ததாகவே   கூட இருக்கட்டும்.  

அது   பழங்காலம்.    ஒரு  முதியவர் அங்கு  வாழ்ந்திருந்தார்.    அவரை எதிர்த்தவர்கள்  பலர்.   ஆதரித்தவர்கள் பலர்.   அனால் அதையெல்லாம்   பொருட்படுத்துபவர்  அல்ல அவர் .  யாதும்  ஊரே  யாவரும்   கேளிர் அவருக்கு. எவரிடமும்  சகஜமாகவே பழகுவார்.

யாரோ  அவரை  கேலி செய்தார்கள்.   மனம்  புண்பட  பேசினார்கள்.   அந்த  முதியவர் துளியுகவலைப்படவில்லை.  சிரித்தார்.   ''தூற்றுவார்  தூற்றட்டுமே. பதிலுக்கு  நீயும்  தூற்றுவது   அவசியமோ சரியோ இல்லை. நீ  உயர்ந்த   நிலையிலேயே இரு. பதிலுக்கு  தூற்றியவருக்கு  அன்பைக்  கொடு''  இதை   சொல்லிவிட்டு கிழவர்  எப்போதும்   போல் இன்முகத்தோடு  மெதுவாக ஒரு  கிராமத்தை  நோக்கி  நடந்து  கொண்டிருந்தார்.  ஒரு   ஆத்திரக்கார இளைஞன் இவரை பார்த்து 

''நீ  யாரைய்யா மத்தவங்களுக்கு  உபதேசம்  பண்ண?  நீயும்  ஒரு  முட்டாள்  தானே ?   ஏதோ நல்லவன்  போல்  நடித்து  ஊரை  ஏமாற்றுகிறவன் '' 

உரக்க  அவன் சொன்னது கேட்டு   அநேகர் கை   கொட்டி சிரித்தனர்.  முதியவரும்  நகைத்தார்.  

'' அப்பா மகனே  எனக்கு  ஒரு  விளக்கம்  கொடுக்கிறாயா?    "நீ  ஒருவருக்கு    கொடுக்க ஒரு   பரிசு பொருள்   வாங்கியிருக்கிறாய் என்று  வைத்துக்கொள்,  அந்த  மனிதர்  எனக்கு  அது   வேண்டாம்  என்றால் அந்த  பரிசு யாரிடம்  போய் ''சேரும்?

''ஏ  கிழமே,  இதிலென்ன   சந்தேகம். அந்த  பரிசு பொருள் நான் வாங்கினது தானே,  எனவே  என்னிடமே  தான்  இருக்கும்.''

'' சரியான  பதில் அப்பனே,  உன்  கோபமும்  அவ்வாறே.  நீ  என்னை  கோபமாக ஏதேதோ  திட்டினாய். நான்  அதை லட்சியமே பண்ணவில்லை.  எந்த   உணர்ச்சியும் எனக்கில்லை.  உனக்கு  தான்   ஏமாற்றம் அல்லவா?  உன் செயல்  உன்னைத்தானே  பாதிக்கும்''

"உன்னை  நீ எந்த  பாதிப்பும் இல்லாமல்  வைத்துக்கொள்ள கோபத்தை  விட்டுவிடு.  அன்பை   பிடித்துக்கொள்.   மற்றவரை வெறுக்கும்போது  நீயே  துன்புறுவாய் . மற்றவரை  அன்போடு  நேசிக்கும்போது நீயும்  அவர்களோடு சேர்ந்து  இன்புறுவாய்.''

 இளைஞன் யோசித்தான்.  நின்றான்.  நெடுஞ்சாண் கிடையாக   அவர் காலில்  விழுந்தான்.  ''தாத்தா  நீ  சொன்னது  சரி.  எனக்கு  புத்தி வந்தது.  என்னை உன்னோடு  சேர்த்துக்கொள். அன்பை   பற்றி நிறைய   சொல்லிக்கொடு'' என்றான்.

' என்னோடு வாயேன்.  எனக்குத்  தெரிந்ததெல்லாம் உனக்கும்  சொல்லித்தருகிறேன்''  என்றார்  முதியவர் கௌதம புத்தர்.   
தாத்தா  எனக்கு  புத்தரை பிடிக்கிறது  என்றான்  கோப்பு.  தாத்தா  சிரித்தார்.   நான்  சொல்லும்   சில  அருமையான வாசகங்களை  நோட்டில்  எழுதிவைத்துக்கொள்.  இது  நான்  சொன்னதில்லை.  யார் யாரோ  அனுபவமிக்கவர்கள்  சொன்னவை. 

கோபு எழுதி வைத்துக்கொண்டவை  என்ன?' 

'' 1.  சரியாக நீ  காரியம்   செய்திருந்தால் கோபப்பட வேண்டியதில்லை.  தப்பாக  பண்ணியிருந்தால்   கோபப்பட உனக்கு  உரிமையில்லை.  எப்படியும்   கோபத்திற்கு இடமே இல்லை  

 2. ''குடும்பத்தில்  பொறுமையாக  இருந்தால் அது   அன்பும்  பாசமும்  ஆகும்.
   எல்லோருடனும்  பொறுமையாக  நடந்தால்  அது  மரியாதையும்  மதிப்பும்  ஆகும்.
   தானே  எப்போதும்  பொறுமையோடு இருந்தால்  அது  தன்னம்பிக்கை  ஆகும்.
   பொறுமையோடு   கடவுளை ஏற்றுக்கொண்டால்  அது  பக்தி ஆகும். .

3.  கடந்த  கால  கஷ்டமான  பாதையை  நினைத்தால்  கண்ணீர்  தான்  வரும். .
எதிர்  காலத்தில் எப்படியெலாம்  நடக்குமோ  என்று  எண்ணி  பெருமூசெரிந்தால்   பயம்  வளரும். .
இந்த  கணத்தில்  நீ  எவ்வளவு   இன்பமாக  நிம்மதியாக இருக்க முடியுமோ  அதை அனுபவி.  சந்தோஷம் அதுவே.!

4.  வாழ்வில்  தோன்றும் ஒவ்வொரு  சோதனையுமே  இன்பமோ  துன்பமோ தரத்தான்  செய்யும்.   ஒவ்வொரும் இன்னலும் நம்மை நம்மை  சிதைக்கலாம் அல்லது  பலப்படுத்தலாம்.  நாம்  எடுத்துக்கொள்வதை  பொறுத்து  நமது  மனம்   நிம்மதியோ கவலையோ  பெறுகிறது. 


5.  யாரை எதிர் நோக்கினாலும்  அங்கே  ஒரு  உயர்ந்த  உள்ளத்தை தேடு  அழகான  முகத்தை அல்ல.
அழகெல்லாம்   நல்லதாக அமைவதில்லை.  நல்லதெல்லாம்  அழகாக  தோற்றமளிக்க அவசியமுமில்லை.  

6.  நான்   உனது புத்தகத்தின்  பக்கங்களிடையே ஒரு  காய்ந்த  பூ வாக  இருக்கிறேனே.  என்னிடம்  வாசமில்லை.  நானும்   இருக்கிறேன் என்று  ஞாபகமாவது உனது  வாழ்வில்  தோன்றுமே. 

7.  கடவுளே   நீ  விரல்களுக்கிடையே   ஏன்  இடைவெளி வைத்தாய்  என்று புரிகிறது. உன் அம்சமான  ஒரு ஜீவன்  என்னை நெருங்கினால்  உடனே அந்த  ஜீவனின்  கையை  கெட்டியாக  நான்  அன்போடு  பாசமோடு கோர்த்துக்கொள்ளவேண்டாமா? ''

No comments:

Post a Comment