பரமேசுவரன் மீது ஒரு சுலோகம் இருக்கிறது. அதில் பக்தர் இப்படிச்சொல்கிறார்.
"திரிபுர சம்ஹாரம் செய்த பிரபுவே! நீ என்னுடைய இரண்டு அபராதங்களைக்ஷமிக்க வேண்டும். அந்த இரண்டு அபராதங்கள் என்ன? போனஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்காதது ஓர் அபராதம். வரப்போகிறஜன்மத்தில் உன்னை நான் நமஸ்கரிக்காமல் இருக்கப்போவதுஇரண்டாவது அபராதம். போன ஜன்மத்தில் நான் உன்னைநமஸ்கரிக்கவில்லை என்று எப்படித் தெரிகிறது என்கிறாயா? எனக்குஇப்போது ஒரு ஜன்மம் ஏற்பட்டிருப்பதிலிருந்தே அது தெரிகிறது. போனபிறவியில் உன்னை நமஸ்கரித்திருந்தால் அப்போதே எனக்கு மோக்ஷம்கிடைத்திருக்கும். இந்த மறு பிறவியே ஏற்பட்டிராது. அது சரி, அடுத்தஜன்மாவில் நமஸ்கரிக்கமாட்டேன் என்றது ஏன் தெரியுமா? இந்தஜன்மாவில் உன்னை நமஸ்கரித்து விட்டேன் அல்லவா? அதனால் நீ இனிஎனக்குப் பிறவியே தரமாட்டாய். மறு ஜன்மாவே இல்லாதபோது அப்போதுஉனக்குச் செய்ய வேண்டிய நமஸ்காரம் மட்டும் எப்படி இருக்கும்?இப்படியாக போன ஜன்மா, வருகிற ஜன்மா இரண்டிலும் உன்னைவணங்காத குற்றத்தை மன்னித்துவிடு."
இந்த ஸ்லோகத்திலிருந்து என்ன ஏற்படுகிறது? மனப் பூர்வமாகஈஸ்வரனை நமஸ்காரம் செய்துவிட்டால் போதும், அவர் நம்மை ஜனனமரண சக்கரத்திலிருந்து விடுவித்து விடுவார். நம் பாவங்களையெல்லாம்போக்கி முக்தி தந்து விடுவார். இந்த ஸ்லோகத்தைச் சொன்னவர் கவித்வசமத்காரத்தில் பாடியவரில்லை. அவர் பழுத்த அநுபவசாலி, எனவேஅவரது வார்த்தையை பரிபூர்ணமாக நம்பி நாமும் ஈசுவரனிடத்தில்சரணாகதி என்று விழுந்து நமஸ்காரம் பண்ணுவோம். நமஸ்கரித்தால்மோக்ஷம் நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் பண்ணினால் அப்படியேகிடைக்கும்! சந்தேகமில்லை.
நமஸ்காரம் செய்வதைத் தண்டம் சமர்ப்பித்தல் என்பார்கள். தண்டம்என்றால் கழி அல்லது கோல் என்று அர்த்தம். கையில் பிடித்திருக்கிற ஒருகோலை விட்டுவிட்டால் அது அப்படியே தடாலென்று கீழேவிழுந்துவிடும். அப்படியே இந்த சரீரத்தை நமதல்ல, இதுஈஸ்வரனுடையது என்கிற எண்ணத்துடன் கீழே போடுவதுதான்நமஸ்காரம். நம் சரீரம் வெறும் மரக்கோல்தான். உதவாத பொருளை 'அதுதண்டமாகி விட்டது' என்கிறோம். அப்படி தண்டமான வஸ்துதான் நம்சரீரம். இதைத் தூக்கிப்பிடித்து நிறுத்தி வைத்து ஆட்டுகிற சக்தி ஈஸ்வரன்கொடுத்ததே ஆகும். இந்த உடம்பை ஏதோ நாமே தாங்கி நடத்துகிறோம்என்ற எண்ணத்தை ஒழித்துவிட்டு, அதாவது அகங்காரத்தைவிலக்கிவிட்டு, அதற்கு அடையாளமாக ஈசுவரன் முன் இந்தச் சரீரத்தைக்கீழே போடவேண்டும். அதுதான் தண்டம் சமர்ப்பிப்பது. ஜுரம் வந்தால் நம்சரீரத்தால் நிற்கவும் நடக்கவும் முடிகிறதில்லை. இந்த ஜன்மாவே பெரியஜுரமாக வந்திருக்கிறது. இதிலிருந்து நம்மைக் கடைத்தேற்றுவதற்காக,நமக்கு வந்திருக்கிற சம்ஸார ஜுரத்தை புரிந்துகொண்டு, அதற்குஅடையாளமாக ஸ்வாமியின் முன் தண்டாகாரமாக விழுந்து நமஸ்கரிக்கவேண்டும்.
'நாம் செய்கிறோம்' என்கிற எண்ணம் போய்விட்டால் அதுவே ஸதாகாலநமஸ்காரம். அந்த அநுபவம் நமக்கு ஸித்திக்காத போதிலும் ஈஸ்வரசந்நிதியிலாவது அப்படி பாவித்து வணங்கித் தரையோடு, தரையாகஎளிமையாகக் கிடக்க வேண்டும். இங்கே வணங்கிவிட்டால், அப்புறம்வெளியே எங்கேயும் வணங்காமல் இருக்கலாம். 'பொறுப்பை உன்னிடமேபூரணமாகக் போட்டேன்' என்பதற்கு அடையாளம் சரீரத்தைத் தரையில்போடுவது, கொஞ்சம் பொறுப்பை நமக்கு என்று வைத்துக் கொண்டால்கூடஸ்வாமி தம் பங்கைக் குறைத்துக் கொண்டு விடுவார். இதில்அரைகுறைக்கு இடமே இல்லை. நம்முடைய நல்லது பொல்லாததுஅவ்வளவும் அவர் விட்டபடி என்று சகல பொறுப்பையும் அவரிடம்தள்ளுவதற்கு வெளி அடையாளமாக உடம்பைத் தரையில் தள்ளிநமஸ்காரம் பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் நம் பாரம்அனைத்தையும் கிருபா சமுத்திரமமான ஸ்வாமியே ஏற்றுஅநுக்கிரகிப்பார்.
No comments:
Post a Comment