Wednesday, October 29, 2014

கடி ஜோக்ஸ் 113



மனைவி: நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை.
கணவன்: பரவாயில்லையே.. இப்போவாவது மனசு வந்ததே..
மனைவி: நீங்க சமைச்சு வையுங்க.. அதுக்குள்ள நான் ஷாப்பிங் போய்ட்டு வந்துடறேன்


...........

பசங்களா நீங்கல்லாம் நல்லா படிச்சி
இந்த நாட்டுக்கு நல்ல பேர
வாங்கி தரனும் புரியுதா?
ஏன்? சார் இந்தியாங்குற பேர்
நல்லா இல்லையா?
,,,,,,,,,,,,,,,,,

உன் மாமியாரோட செல்போனை எடுத்து, எதுக்காக வைப்ரேஷன் செட் பண்றே..?
அவங்களால ஒரு சின்ன அதிர்வைக்கூட தாங்கிக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்.....
அதை டெஸ்ட் பண்ணலாமேன்னுதான்!"

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

.
மிஸ்ட்டர் X தன்னுடைய பாஸ் வீட்டுக்குப்போனார். அங்கே அவருடய 3 

வயது பேரன் விளையாடிக்கொண்டிருந்தான். இவர் ”பையன் துருதுருன்னு 

நாட்டியா இருக்கானே” பாஸ் ரொம்ப மகிழ்ச்சியுடன் “அவன் என் மாதிரி” 

என்று சொன்னார். உடனே நம்ம ஆளு அந்த பையனை கூப்பிட்டு 

கொஞ்சிவிட்டு வீட்டுக்கு வந்துட்டார். மறுநாள் மகிழ்ச்சியுடன் ஆஃபீஸ் 

போனார். அவருக்கு அங்கே சர்ப்ரைஸா சஸ்பென்ஷன் ஆர்டர் காத்திருந்தது. 

ஏன்?

அவர்தான் ஆர்வக்கோளாருல பாஸொட பேரனை "Come Naughty"nnu தமிழ்ல 


“கம்மனாட்டி, கம்மனாட்டி”ன்னு கொஞ்சிட்டாரு.

................................................................................

.
நோன்பு பலகாரம் கொடுக்க  நம்ம  வீட்டுக்கு  ராமன் போயிருக்காரு போன 

இடத்துல பெரிய ஷாக் .வாசல்ல ஒரு திருவிழால வெடிக்கற அளவுக்கு 

பட்டாசு வெடிச்ச குப்பை . பார்த்த வீட்டுக்குள்ள போயிட்டு உரிமையோட 

ஏன்டா மச்சி இவ்ளோ பட்டாசா வாங்குன எதுக்குடா காச கரியாக்குற  ?

அம்மா கிட்ட,' ஏம்மா அவன் தான் மூளை இல்லாதவன் நீங்களாவது அவன் 

கிட்ட சொல்ல கூடாதா இந்த காசுக்கு உறுப்படியா ஏதாவது வாங்கி 

கொடுத்திருக்கலாமே''?
அம்மா .: கிழிச்சான் வாங்கி இந்த ஊர்லையே அதிகமா பட்டாசு வெடிச்சது 

நானா தான் இருக்கனும்னு சொல்லிட்டு எல்லார் வீட்டு வாசல்ல பட்டாசு

வெடிச்சது வெடிக்காத குப்பை எல்லாத்தையும் பொறுக்கி எடுத்துட்டு வந்து 


போட்டு வைச்சிருக்கான் இதை இப்ப நான் வேற பெருக்கி எடுக்கனும்.

என் உயிரை வாங்குறன்..


....................................

நிறுத்துங்க....

'நாங்கல்லாம் அந்த காலத்துலயே'ன்னு பீடிகையோட ஆரம்பிக்கறத நிறுத்துங்க.

தனக்கு வந்த கிப்டோட ராப்பர மாத்தி இன்னொருத்தருக்கு ப்ரெசண்ட் பண்ணறத நிறுத்துங்க.


படிச்சதும், அடுத்து எப்ப வேலைக்கு போக போறேன்னு கேக்குறது .வேலைக்கு போனதும் அடுத்து கல்யாணம் எப்பனு கேக்குறத நிறுத்துங்க...
.
வேலை இருந்தா ..சொந்த வீடு இருந்தாத்தான் பொண்ணு தருவேன்னு சொல்றத நிறுத்துங்க.

சரக்கடிச்சா ஓட்டை இங்கிலிஷ் பேசுறத நிறுத்துங்க.

ஆபீஸ் வந்த கண்டிப்பா வேலை பாக்கணும் னு சொல்றது ..வேல செஞ்சாதான் சம்பளம்ன்றத நிறுத்துங்க.

'இந்த வருஷம் வெயில் அதிகம்'னு ஒவ்வொரு வருஷமும் சலிச்சுக்கறத நிறுத்துங்க.

டைம் இல்லைன்னு சொல்லி உப்புமாவ சமைச்சு போடறத நிறுத்துங்க...

பக்கத்து தெருவுக்கு போகறதுக்கு கூட கூகுள் மேப்ப பாக்கறத நிறுத்துங்க.

நாயர் கடையில வடைய சாப்பிட்டுட்டு 'KFC யில ரொம்ப டிலே பண்றான்னு' அலுத்துக்கறத நிறுத்துங்க.

சலூனுக்கு போனா கூட ஸ்டேடஸ் போடறத நிறுத்துங்க.

டிஸ்கி: கொஞ்சம் சொந்தம்..மீதம் காப்பி..

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


டேய் மகனே நீ என்ன் வேணும்னாலும் படி. பிச்சை எடுத்தாவது நான் 


உன்னை படிக்க வைக்கிறேன்.

நானும் படிச்சு முடிச்சுட்டு அதத்தான் செய்யணும்.வேடிக்கையான நேரம்
...............................................................................
அந்த அரசியல் கட்சி தலைவர் லஞ்சம் வாங்குபவர் என்று எப்படி கண்டு 

பிடிச்சே?

கூட்டத்துல பேசும்போது “ எங்கள் எதிர் காலம் உங்கள் ’பையில்’ 

இருக்கிறது”ன்னு சொன்னாரே.
.........................

வருவது கஷ்டம்.
வந்தால் போவது அதைவிட கஷ்டம்.


"" தொப்பை ""
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
காய் கறிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.

1.காய்ச்சல் வந்த காய் - “சுர”க்காய்.

2.பரிதாப்மான காய் - “பாவ்”க்காய்.

3.இரக்கம் மிகுந்தது - “கருணை” கிழங்கு.

4.மழைக்கு உதவும் காய் - “குடை”மிள்காய்.

5.போதை தரும் காய் - “பீர்”க்கங்காய்.

6.போலீஸுக்கு பிடித்தது - “பீட்”ரூட்.

7.அசைவ காய் - ”முட்டை”க்கோஸ்.

8.எங்கும் நிற்காத காய் - ”தேங்” காய்.

9.முருகனுக்கு பிடித்தது - சர்க்கர”வள்ளி”

10.குத்தும் காய் - “முள்”ளங்கி.

11.அரசனுக்கு பிடித்தது - “சேனை”க்கிழங்கு

12.சிடு, சிடு என்று இருக்கும் காய் - “கோவ்”க்காய்.

13.ஒன்றுமே இல்லாத காய் - “காலி”ஃப்ளவர்.

14வீட்டை திறக்க உகந்த காய் - “கீ”ரை. (திருடனுக்கும் பிடிக்கும்)

15 பெண்களுக்குப்பிடித்தது - “செள” செள

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
மனைவி:-
உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி   இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..

கணவன்:-
சொன்னேனே... மறந்துட்டியா...

மனைவி:-
எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...

கணவன்:-

உன்னை ராணி மாதிரி வச்சி  காப்பாத்துவேன்னு நான் சொல்லலை.

No comments:

Post a Comment