Tuesday, August 12, 2014

கடலும் கடவுளும்




மஹா பெரியவா எவ்வளவு கடினமானதத்துவமாக இருந்தாலும் எளிதில்புரிகிறமாதிரி சின்ன சின்ன தெரிந்தஉதாரணங்களை வைத்து விளக்குவா.சமுத்ர ஜலத்தை உதாரணமாக காட்டிபரமாத்மாவை நமக்கு புரிய வைத்தவிஷயம் தான் இந்த செய்தி.  இதைபடிக்கிறபோது நான் அனுபவித்தசந்தோஷத்தை உங்களுக்கும் பரிமாறவேஇந்த செய்தி மடல் உங்களுக்குதரப்பட்டுள்ளது.
சில பேர்   ''எனக்கு  இது  ஏற்கனவே  தெரியுமே  ஏன்யா  இதையே  திருப்பி  திருப்பி  அனுப்பறே?''   என்று  கோபித்துக்கொள்ள  நிறைய  காரணம்  இருந்தாலும்     ''ஐயா,  தெரியாதய்யா''  என்று  கெஞ்சப்  போவதில்லை.   தியாகராஜ   சுவாமிகள்  கீர்த்தனை  எத்தனையோ  நூற்றாண்டுகளுக்கு  முன்னாலே எழுதி  ஆயிரம்  தடவை  கேட்டபோதும்   ''நீ  தய  ராதா''  என்று  ஒருவர் பாவத்தோடு  பாடினால்  சைக்கிளை சுவற்றில்  சார்த்தி விட்டு  கண்களை மூடி  தலையை  ஆட்டி  ரசித்து   நின்று  கேட்கிறோமே.  மகாபெரியவா  ஞானத்தை  என் போன்றோர்  தெரிந்தவரை  ஆர்வத்தோடு   எழுதினால் கூட   படிக்க  கசக்குமா?  
    ”சமுத்திரம் ஆடாமல் அசையாமல்இருக்கிறபோது ஒரு காற்று அடித்தால்உடனே அதில்  ஜலத்துளிகள் குமிழ்களாகத்தோன்றுகின்றனஇன்னோரு காற்றுஅடிக்கிறபோது அந்தக் குமிழ்கள் உடைந்துபோகின்றனபரமாத்மா ஆடாத அடங்காதசமுத்திரம் மாதிரிமாயை என்றகாற்றினால் அதிலே ஜீவாத்மாக்கள் என்கிறநாமெல்லாம் குமிழ் மாதிரிதோன்றியிருக்கிறோம்ஆசாரியாருடையகடாக்ஷம் என்கிற நல்ல காற்று நம்மேல்பட்டால் குமிழ் உடைந்து ஜலத்துளிசமுத்திரத்தோடு ஜக்கியமாகிவிடுவதுபோல்நாமும் பரமாத்மாவிடம்இரண்டறக் கலந்து விடுவோம்.''
''சமுத்திர ஜலம் என்றென்றும் அளவுகுறையாமலேதான் இருக்கிறது.அதிலிருந்து ஆவி பிரிந்து சென்றுமழையாகிஉலகத்தில் பலவிதங்களில் நதி,ஒடை, வாய்க்கால்ஏரிகுளம்கிணறுஎன்று ஜலாசயங்களாக ஆகின்றன.சமுத்திரம் வற்றுவதில்லைஅதில் புதிதாகவெள்ளம் வருவதுமில்லைஅதிலிருந்துவந்த ஆறு குளங்கள் வற்றலாம்அல்லதுஇவற்றில் வெள்ளம் வரலாம்வெயில்நாள்களில் வீட்டுக் குழாய்களில் ஜலம்இல்லைரெட்ஹில்சில் ஜலம் இல்லைஎன்கிறோம்மழைக்காலத்தில்கோதாவரியில் வெள்ளம்காவேரியில்உடைப்பு என்று பேசுகிறோம்ஆனால்சிருஷ்டி காலத்தில் இந்த உலகத்தில்எத்தனை ஜலம் இருந்ததோ அதில் ஒர்இம்மிகூட - க்ரெயின் கூட - இன்றுவரைகுறைய வில்லைகூடவும் இல்லை.''


''பணக்காரர்கள் சிலர் நிலத்தை விற்று வீடுவாங்குவார்கள்வீடுகளை விற்று பாங்கில்போடுவார்கள்பங்குப் பணத்தைஷேர்களாக மாற்றுவார்கள்மொத்தச்சொத்து மாறாதுஅவற்றின் ரூபம் தான் பலவிதங்களில் மாறும்எல்லாவற்றையும்கூட்டினால் கணக்கு சரியாக இருக்கும்.அப்படியேதான் லோகத்தில் உள்ள மொத்தஜலம் சமுத்திரத்தில் இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் மேகத்தில் இருக்கவேண்டும்அல்லது நதியாகஏரி,குளங்களாக இருக்க வேண்டும்.''
''பரமாத்மா பலவாகத்தோன்றியிருக்கிறார்.தோன்றிய பின்னும்சமுத்திரம் மாதிரி கூடாமல்குறையாமல்இருக்கிறார்நமக்குக் கூடுதல்குறைவுஎல்லாம் உண்டாகிறதாகத் தோன்றுகிறது.ஆனால் உள்ளது ஒன்றேதான் என்ற ஞானம்வந்தால்எங்குமே கூடுதலும் இல்லை.குறைவும் இல்லை.''
ஜலத்தைதிருஷ்டாந்தமாக வைத்துப்பரமாத்ம ஜீவாத்ம ஸம்பந்தத்தைச்சொல்லும்போது நதிகளைப் பற்றிவிசேஷமாகச் சொல்ல வேண்டும்

'சமுத்திர ஜலம் மழையாகி அதிலிருந்துஏரியும்அதிலிருந்து குளமும்குட்டையும்,கிணறும் உண்டாகின்றனஇவை மறுபடியும்சமுத்திரத்தில் கலப்பதில்லைஆனால்,எல்லா நதிகளும் சமுத்திரத்தையே தேடிவந்து கலந்து விடுகின்றன

வடக்கே ஒரு நதிக்கு ஸோன் என்று பெயர்.சோணம் என்றால் சிவப்புஇந்த நதிசிவப்பான மண் வழியே ஒடுகிறது.ஆந்திராவில் கிருஷ்ணா நதி இருக்கிறது.கிருஷ்ண என்றால் கருப்பு.   இந்த நதி கருப்புமண் மீது ஒடுகிறது

கங்கை என்றால் வெளுப்புஇதுவும் அதுஒடுகிற பிரதேசத்தைப் பொருத்து அமைந்தபெயர்தானமூன்றும் ஒரே கடலில்தான்கலக்கின்றனசிகப்பு ரஜோ குணம்கருப்புதமோ குணம்வெள்ளை ஸத்வ குணம்.மனசானது முக்குணங்களில் எதில்பாய்கிறதோஅதை ஒட்டி ஜீவாத்மாவின்சுபாவம் அமைகிறதுஎப்படியானாலும்,கடைசியில் பரமாத்ம சமுத்திரத்தில்தான்கலந்தாக வேண்டும்.

( water finds its level is a saying  well known to all of us)- தொடர்புடைய நீர்ப்போக்கு ஒரேமட்டத்தில் இருக்க முயலும் என்பார்கள்.மலை உச்சியில் மழை பொழிந்து நதிஉண்டாகிறதுஅங்கிருந்து கீழேகனவேகமாகஒரே இரைச்சலோடு நதிவிழுகிறது. அப்போது  அதற்கு  நாம்  வைக்கும் பெயர்   நீர்  வீழ்ச்சி.  

பூமியில்ஒடும்போது அத்தனை சத்தம் இல்லை.முடிவில் சமுத்திரத்தில் கலந்தபின் சத்தமேஇல்லைஅப்போதுதான் நதி தன்லெவலுக்கு வருகிறதுஅதாவதுலெவலுக்கு வந்தவுடன் பரம சாந்தமாகிறது.எதிலுமே சரிலெவல் - அதாவது அளவுஅறிந்துஅந்த மட்டத்தோடு நிற்கிறமனோபாவம் வந்தால்தான் சாந்தம்உண்டாகும்லெவலுக்கு மீறிச் செய்கிறதாட்பூட் காரியங்கள் பிறருக்குப்பிரமிப்பூட்டலாம்ஆனால் இதனால் நாமேநம் சாந்தியைக் குலைத்துக் கொள்வதுதான்பலன்உருட்டல்புருட்டல்மிரட்டல்,இரைச்சல் எல்லாவற்றையும் குறைத்துஅடக்கமாக வருகிற நதியை சமுத்திரம்எதிர் கொண்டு சென்று பின்வாங்கிச்செல்கிறதுஇதனால்தான் நதியின் சங்கமஸ்தானங்களுக்குச் சிறிது தூரம்முன்னாலிருந்தே உப்புக் கரிக்கிறதுநாம்லெவலை மீறாமல்அடக்கமாகச்சென்றால்பரமாத்ம சமுத்திரமும் நம்மைஎதிர் கொண்டு அழைத்துப்போய் தனக்குள்அடக்கம் செய்து கொண்டு விடும்”

இதைக்காட்டிலும்  தெளிவாக  யாராவது  சொல்ல முடியுமா.   இதை  நீங்களும்   ரசித்து  தெரிந்த  அறிந்த  அத்தனை பேருக்கும்  அனுப்புங்கள்.  உங்களால் ஒரு  நல்ல  காரியம்  முடியுமென்றால்  செய்ய  என்ன  யோசனை? 

No comments:

Post a Comment