Tuesday, August 12, 2014

லக்ஷ்மீகரம் வேண்டுமா?

                                                                    
பழைய காலத்தில்  நமது  முன்னோர்கள்,  பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமையாக கொண்டிருந்தார்கள்.   அது  சாஸ்திரம் சொல்வது  போல   நடக்கும் விஷயம்.    இறைவனை வழிபடாத நாளெல்லாம்,  வணங்கா   நாள்  எல்லாம்  வீணான நாள் என்று  அவர்கள் நம்பினார்கள். 

 அதனால், காலையிலோ மாலையிலோஇதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி,இறைவனை வழிபட்டால், சகலஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால்,பூஜை செய்வதற்கென்று, சிலவிதிமுறைகள் உண்டு. 

பூஜையின் போது சந்தனம், குங்குமம்,புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும்வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும்.கடைசியில், கற்பூர ஆரத்தி காட்டவேண்டும். இதில், உங்களுக்கு சவுகரியகுறை ஏற்பட்டு, சிலவற்றை பூஜையில்வைக்க முடியா விட்டால், ''அட்சதாம்சமர்ப்பயாமி''   என்று சொல்லி விட்டால்போதும். ஒருவர், அப்படி பூஜை செய்தபோது, இல்லாத பொருளுக்கெல்லாம்,அதன் பெயரைச் சொல்லி, அட்சதாம்சமர்ப்பயாமி என்று   சொல்லிக் கொண்டே பூஜையை முடித்து விட்டார்.    பூஜை செய்பவர்,  சாஸ்த்ரி.   சாஸ்திரம்  தெரிந்து  அதன் படி  சம்பிரதாயமாக  பூஜை  எல்லாம்  நடத்திக்கொடுப்பவர்.  சாஸ்திரிகளுக்கு தட்சிணை கொடுக்க வேண்டும்.

ஒரு   க்ரஹஸ்தர்  பணம்  கொஞ்சம் கணக்கு பார்ப்பவர்.    இழுத்துப்  பிடிப்பவர்.    சாஸ்த்ரிகள்  தான்  எதாவது  இல்லை என்றால்   கொஞ்சம்  அக்ஷதையை  எடுத்து  அதற்கு  பதிலாக   அக்ஷதாம்  சமர்ப்பயாமி  என்று  சொல்லலாமே என்று  கற்றுக்கொடுத்ததால்   கடைசியில்  சாச்த்ரிகளுக்கு   தக்ஷிணை  கொடுக்கும்  சமயத்தில்   பூஜை முடிந்ததும்,தட்சிணார்த்தம் அட்சதாம் சமர்ப்பயாமிஎன்று சொல்லி, தட்சணைக்கு பதிலாக,அட்சதையை நீட்டினாராம்.   பூஜைசெய்தவர்  சாஸ்த்ரிகள்  கதி கலங்கிப் போய்   ''என்ன இது? தட்சணை எங்கே?''. என்றார் 

'' அதுதான் எல்லாவற்றுக்கும் பதிலாக,அட்சதையே போதும் என்றீர்களே...பிடியுங்கள்  தட்சிணைக்குப்  பதிலாக  அட்சதையை''... என்றார் க்ரஹஸ்தர் .  குதிரைக்கு  குர்ரம்   என்றால்   யானைக்கு  யர்ரம் என்று  சொல்கிற  விஷயம்.


பூஜையின் போது, தூபம், தீபம், விபூதி,கண்ணாடி, குடை, சாமரம், விசிறிஇவைகளை சமர்ப்பணம் செய்வது வழக்கம்.தூபத்தில்                                        அக்னி தேவன்,
தீபத்தில்                                          சிவன்,
விபூதியில்                                      மகேஸ்வரன், 
கண்ணாடியில்                              சூரியன், 
குடையில்                                       சந்திரன், 
சாமரத்தில்                                      மகாலட்சுமி, 
விசிறியில்                                      வாயுதேவன்உள்ளனர். 

அதனால், இந்த உபசாரங்களோடு பூஜைசெய்ய வேண்டும். நைவேத்யத்தின் போதுமுத்திரை காட்டுவது, துர்தேவதைகளைவிரட்டி விடும். எல்லாருமே, மகாலட்சுமிநம் வீட்டுக்கு வர வேண்டும், என்று தான்விரும்புவர். சிலர், மகாலட்சுமி படம் பேட்டகாலண்டரை வாங்கி வந்து, பூஜை அறைஅல்லது ஹாலில் மாட்டி திருப்திப்படுவர்.விடியற்காலையில் எழுந்ததும்மகாலட்சுமியை தரிசனம் செய்தால் நல்லதுஎன்பதற்காக, சிலர், படுக்கை அறையிலும்மாட்டி வைப்பர்.

இல்லத்தரசியானவள், காலையில் எழுந்துபல் விளக்கி, குளித்து, நெற்றிக்கிட்டு,தலையை கோதி, வாசல் பெருக்கி,கோலமிட்டு, வீட்டுக்குள் வந்து சுவாமிபடத்துக்கு முன் விளக்கேற்றி, நமஸ்காரம்செய்து, முடிந்தால் இரண்டு பூவை போட்டு,அதற்கு பின் தான், காபி விஷயத்தைகவனிக்க வேண்டும். (இது   ஆறுமணிக்கு  முன்  எழுபவர்களுக்கு.   நாரிமணிகள் 9 மணிக்கு  எழுபவர்கள்   அலாரம்  வைத்துக் கொள்ளலாம்.  அதை   மண்டையில் தட்டிவிட்டு  மேலும்  தூங்குபவர்கள்  இந்த  பாராவை படிக்கவேண்டாம்.) 

அத்துடன், வீட்டில், வேத கோஷம், துதிப்பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கவேண்டும். வீட்டில் மூலைக்கு மூலைகுப்பையை சேர்த்து வைக்கக் கூடாது. அரிசி,பருப்பு போன்ற தானியங்கள் சிதறக் கூடாது.காலையில், முடிந்தால், பசுவுக்கு ஒரு பிடிபுல் கொடுப்பது புண்ணியம்.வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கும்,கன்றுக்கும் மஞ்சள் பூசி, குங்குமமிட்டுவலம் வருவது பெரிய புண்ணியம். வீட்டில்ஆச்சார அனுஷ்டானங்கள் இருந்தாலே,மகாலட்சுமி வாசம் செய்வாள். மனசுவைத்தால், இதையெல்லாம் செய்யலாம்.

மகா  பெரியவா  சொல்லும்  இந்த  சிஸ்டம் .கைடன்ஸ்,  பின் பற்றி  அனைவரும்  சுபிக்ஷமாக,  லக்ஷிமிகரமாக  வாழ  விழைகிறேன். அது  மகா பெரியவா  வார்த்தைக்கு  நாம்  கொடுக்கும்  மரியாதை.  நமது  நலனுக்காக.  நம்  சந்ததி  நலனுக்காக.  

No comments:

Post a Comment