கிராமத்தில் முகாம். விவசாய வேலை செய்யும் ஒரு பெண்மணி, தரிசனத்துக்கு வந்தாள் .
பெரியவாள் எதிரில் கையை கூப்பிக்கொண்டு நின்றாள். நெஞ்சு படபடவென்று அடித்து கொண்டிருந்தது.
"என்ன வேலை பண்றே?"
"வயல் வேலைக்கு போறேன், சாமி. ஆறு பசங்கள். மாமியா, என்கிட்ட இருக்கு. காலையிலே சோறாக்கி வெச்சிட்டு போயிடுவேன். இருட்டினப்புறம்தான் வீட்டுக்கு வருவேன். நான் எப்படி சாமியை கும்பிடறது? கோயிலுக்கு போறது? உடம்பும் களைச்சுப் போவுது. சாமி கும்பிடவே நேரமில்லே, சாமி.."
பெரியவாளின் திருக்கண்கள் கருணையால் நிரம்பியிருந்தன.
"சாமி கும்பிடனும்னு நினைகிறையே, அதுவே சாமி கும்பிட்ட மாதிரிதான்!
"காலையிலே சூரிய உதயம் ஆனவுடன், கிழக்கே சூரியனை பார்த்து ஒரு கும்பிடு போடு. சாயங்காலம் விளக்கு வச்சவுடனே மேற்கு திக்கு பார்த்து ஒரு கும்பிடு போடு.
"நீ கர்மயோகி. ஒரு விநாடி நேரம் தெய்வத்தை நினைச்சாலே போறும் - சகல புண்யமும் கிடைச்சிடும்.."
பெண்மணி கண்களை துடைத்து கொண்டாள். "சூரியனை கும்பிடு - சகல புண்ணியமும் கிடைச்சிடும்!" என்ன ஆறுதல்! என்ன கருணை!
பெரியவாள் பல வகையான பழங்களை அந்த பெண்மணிக்கு கொடுக்க சொன்னார்கள். தீனமாக வந்த மங்கை, திரும்பி போகும்போது, அரசியாக - மங்கயர்கரசியாக போனாள்.
பெரியவாள் ஞான சூரியன். கும்பிட்டாலே போதும் - சகல புண்ணியமும் கிடைச்சிடும்!
பெரியவாள் எதிரில் கையை கூப்பிக்கொண்டு நின்றாள். நெஞ்சு படபடவென்று அடித்து கொண்டிருந்தது.
"என்ன வேலை பண்றே?"
"வயல் வேலைக்கு போறேன், சாமி. ஆறு பசங்கள். மாமியா, என்கிட்ட இருக்கு. காலையிலே சோறாக்கி வெச்சிட்டு போயிடுவேன். இருட்டினப்புறம்தான் வீட்டுக்கு வருவேன். நான் எப்படி சாமியை கும்பிடறது? கோயிலுக்கு போறது? உடம்பும் களைச்சுப் போவுது. சாமி கும்பிடவே நேரமில்லே, சாமி.."
பெரியவாளின் திருக்கண்கள் கருணையால் நிரம்பியிருந்தன.
"சாமி கும்பிடனும்னு நினைகிறையே, அதுவே சாமி கும்பிட்ட மாதிரிதான்!
"காலையிலே சூரிய உதயம் ஆனவுடன், கிழக்கே சூரியனை பார்த்து ஒரு கும்பிடு போடு. சாயங்காலம் விளக்கு வச்சவுடனே மேற்கு திக்கு பார்த்து ஒரு கும்பிடு போடு.
"நீ கர்மயோகி. ஒரு விநாடி நேரம் தெய்வத்தை நினைச்சாலே போறும் - சகல புண்யமும் கிடைச்சிடும்.."
பெண்மணி கண்களை துடைத்து கொண்டாள். "சூரியனை கும்பிடு - சகல புண்ணியமும் கிடைச்சிடும்!" என்ன ஆறுதல்! என்ன கருணை!
பெரியவாள் பல வகையான பழங்களை அந்த பெண்மணிக்கு கொடுக்க சொன்னார்கள். தீனமாக வந்த மங்கை, திரும்பி போகும்போது, அரசியாக - மங்கயர்கரசியாக போனாள்.
பெரியவாள் ஞான சூரியன். கும்பிட்டாலே போதும் - சகல புண்ணியமும் கிடைச்சிடும்!
No comments:
Post a Comment