பாலுக்குள் இவ்ளோ இருக்கா ..
பசுகள் ஒன்றும் அறியாத ஜீவன்கள். அவற்றை பராமரித்து, அவற்றிடம் உள்ள பாலை பயன்படுத்தி, நல்ல பலனைப் பெறுவது எப்படி என்று உபதேசிப்பவன் கோபாலன். பால் என்றால் உள்ளம் என்று பொருள். முதலில் உள்ளத்தை பால் போல் சுத்தமானதாக்க வேண்டும். கோபாலனை அண்டி பக்தி என்னும் தீயில் அதை பதமாக காய்ச்ச வேண்டும். சாந்தத்தைக் கொண்டு உறை ஊற்றி தயிராக்க வேண்டும். இதயம் என்னும் குடத்தில் தயிர் ஊற்றி அது உறைந்ததும், பக்தியென்ற மத்தைக் கொண்டு கடைந்து, பூத்துவரும் வெண்ணெயைப் போன்ற அனந்தசயனனான பரமபுருஷனைக் காண வேண்டும். தயிரில் பால், வெண்ணெய், நெய் ஆகிய முப்பொருளும் அடங்கியிருந்தாலும், அவற்றை தக்க முறைகள் கொண்டே தனித்தனியாக்க முடியும் என்பது உண்மை. அதைப்போலவே நம் இதயத்தில் உறைந்திருக்கும் கடவுளை நாம் காண வேண்டுமானால், தக்க முயற்சிகள் எடுத்தால் தான் இயலும்.
-காஞ்சிப்பெரியவர்
................................................................
பஞ்சாங்கத்தில் ‘வபன பௌர்ணமி’ என்று சில பௌர்ணமி திதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஸ்ரீகாமகோடி பீடாதிபதிகள், அன்றைய தினம்தான் க்ஷவரம் (முடி மழித்தல்) செய்து கொள்வது சம்பிரதாயம்.
ஒரு வபன பௌர்ணமியன்று மஹாபெரியவாளுக்குக் கடுமையான காய்ச்சல். அதனால் வபனம் செய்து கொள்ளவில்லை. ஒரு வபன பௌர்ணமி தவறினால், அடுத்த வபன பௌர்ணமி வரை காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். காய்ச்சல் காரணமாக முடி மழித்துக் கொள்ளாததால், பெரியவாளுக்குத் தலைமுடியும் தாடியும் மிகவும் வளர்ந்துவிட்டன.
அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு மரத்தடியில் அமர்ந்து பெரியவா ஜபம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது, ஒரு தம்பதிகள் அவசரமாகத் தரிசனத்துக்கு வந்தார்கள். ஏராளமான முடியுடனிருந்த பெரியவாளை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. யாரோ ஒரு சந்நியாசி என்று நினைத்து, அவர்களைப் பார்த்தே, “ஸ்வாமிகள் எங்கே?” என்று கேட்டார்கள்.
பெரியவா கொஞ்சமும் பதற்றப்படாமல், “ஸ்வாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன். இருக்கும் இடம் தெரியவில்லை” என்று, இரு பொருள் தொனிக்கப் பதில் கூறினார்கள். வந்தவர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. ஸ்வாமிகளைத் தரிசிக்க வேண்டும் என்று ஆவலுடன் வந்தால், அவர் இருக்குமிடமே தெரியவில்லையாமே!
எதிரே வந்த ஒரு தொண்டரிடம் விசாரித்தார்கள்.
அவர் மரத்தடியிலிருந்த பெரியவாளை சுட்டிக்காட்டி, “அதோ இருக்காளே!” என்று கூறியதும், தம்பதிகளுக்கு உடல் வெலவெலத்துவிட்டது. ‘எவ்வளவு பெரிய அபசாரம் செய்துவிட்டோம்?’ என்று தவித்துக் கொண்டிருந்தபோது, பெரியவாளே அவர்களைக் கூப்பிட்டு, அருகில் உட்காரச் சொன்னார்கள்.
”தாடி ரொம்பவும் வளர்ந்துபோச்சு! அதனாலே என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் தான் உங்களை பயமுறுத்தியிருக்கேன்! பரவாயில்லை…” என்று அவர்களுக்கு மனத்திருப்தி ஏற்படும் வரை சமாதானமாகப் பேசி, பிரசாதம் கொடுத்தார்கள்.
பெரியவாளுக்கு இந்த மாதிரி விளையாட்டெல்லாம் ரொம்பப் பிடிக்கும்!
பசுகள் ஒன்றும் அறியாத ஜீவன்கள். அவற்றை பராமரித்து, அவற்றிடம் உள்ள பாலை பயன்படுத்தி, நல்ல பலனைப் பெறுவது எப்படி என்று உபதேசிப்பவன் கோபாலன். பால் என்றால் உள்ளம் என்று பொருள். முதலில் உள்ளத்தை பால் போல் சுத்தமானதாக்க வேண்டும். கோபாலனை அண்டி பக்தி என்னும் தீயில் அதை பதமாக காய்ச்ச வேண்டும். சாந்தத்தைக் கொண்டு உறை ஊற்றி தயிராக்க வேண்டும். இதயம் என்னும் குடத்தில் தயிர் ஊற்றி அது உறைந்ததும், பக்தியென்ற மத்தைக் கொண்டு கடைந்து, பூத்துவரும் வெண்ணெயைப் போன்ற அனந்தசயனனான பரமபுருஷனைக் காண வேண்டும். தயிரில் பால், வெண்ணெய், நெய் ஆகிய முப்பொருளும் அடங்கியிருந்தாலும், அவற்றை தக்க முறைகள் கொண்டே தனித்தனியாக்க முடியும் என்பது உண்மை. அதைப்போலவே நம் இதயத்தில் உறைந்திருக்கும் கடவுளை நாம் காண வேண்டுமானால், தக்க முயற்சிகள் எடுத்தால் தான் இயலும்.
-காஞ்சிப்பெரியவர்
................................................................
பஞ்சாங்கத்தில் ‘வபன பௌர்ணமி’ என்று சில பௌர்ணமி திதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஸ்ரீகாமகோடி பீடாதிபதிகள், அன்றைய தினம்தான் க்ஷவரம் (முடி மழித்தல்) செய்து கொள்வது சம்பிரதாயம்.
ஒரு வபன பௌர்ணமியன்று மஹாபெரியவாளுக்குக் கடுமையான காய்ச்சல். அதனால் வபனம் செய்து கொள்ளவில்லை. ஒரு வபன பௌர்ணமி தவறினால், அடுத்த வபன பௌர்ணமி வரை காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். காய்ச்சல் காரணமாக முடி மழித்துக் கொள்ளாததால், பெரியவாளுக்குத் தலைமுடியும் தாடியும் மிகவும் வளர்ந்துவிட்டன.
அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு மரத்தடியில் அமர்ந்து பெரியவா ஜபம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது, ஒரு தம்பதிகள் அவசரமாகத் தரிசனத்துக்கு வந்தார்கள். ஏராளமான முடியுடனிருந்த பெரியவாளை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. யாரோ ஒரு சந்நியாசி என்று நினைத்து, அவர்களைப் பார்த்தே, “ஸ்வாமிகள் எங்கே?” என்று கேட்டார்கள்.
பெரியவா கொஞ்சமும் பதற்றப்படாமல், “ஸ்வாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன். இருக்கும் இடம் தெரியவில்லை” என்று, இரு பொருள் தொனிக்கப் பதில் கூறினார்கள். வந்தவர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. ஸ்வாமிகளைத் தரிசிக்க வேண்டும் என்று ஆவலுடன் வந்தால், அவர் இருக்குமிடமே தெரியவில்லையாமே!
எதிரே வந்த ஒரு தொண்டரிடம் விசாரித்தார்கள்.
அவர் மரத்தடியிலிருந்த பெரியவாளை சுட்டிக்காட்டி, “அதோ இருக்காளே!” என்று கூறியதும், தம்பதிகளுக்கு உடல் வெலவெலத்துவிட்டது. ‘எவ்வளவு பெரிய அபசாரம் செய்துவிட்டோம்?’ என்று தவித்துக் கொண்டிருந்தபோது, பெரியவாளே அவர்களைக் கூப்பிட்டு, அருகில் உட்காரச் சொன்னார்கள்.
”தாடி ரொம்பவும் வளர்ந்துபோச்சு! அதனாலே என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் தான் உங்களை பயமுறுத்தியிருக்கேன்! பரவாயில்லை…” என்று அவர்களுக்கு மனத்திருப்தி ஏற்படும் வரை சமாதானமாகப் பேசி, பிரசாதம் கொடுத்தார்கள்.
பெரியவாளுக்கு இந்த மாதிரி விளையாட்டெல்லாம் ரொம்பப் பிடிக்கும்!
No comments:
Post a Comment