வெற்றிலை போடுவது ஒரு அநாகரீகச்செயல் என்றும்,பழுப்பு நிறப் பற்களைப் பார்த்து கேலி செய்வதும் வழக்கமாக உள்ளது. உண்மையில் வெற்றிலைபோடுவது ஒரு நல்ல பழக்கம் ஆகும்.
அது அருவெருக்கத்தக்கதாகவும்,அபாயகரமானதாகவும் ஆனது,அதை நாம் கையாண்ட விதத்தினால் தான்! அளவுக்கு மீறினால் அமுதமும் விஷமாகும்;(அளவோடு குடித்தாலும் கோலாக்கள் கடும் விஷமாகும்)
அதுவும் நல்லது என்று ஒரு பழக்கத்தை ஆரம்பித்தால்,அதை கேடு விளைவிக்கக் கூடியதாக மாற்றுவது நமக்குக் கைவந்த கலை!!
மருத்துவரைக் கேளுங்கள்: “வெற்றிலை போடாதீர்கள்! அது கெடுதல் தரும் கேன்சரைக் கொண்டு வரும்” என்பார்.
கிறிஸ்தவத்தை தனது மதமாகக் கொண்ட ஆங்கிலேயனாகட்டும்; அவன் இந்தியாவில் பரப்பிய (பக்கவிளைவு தரும்) அலோபதி மருத்துவமாகட்டும்;அலோபதிமருத்துவர்களாகட்டும்;இவர்களுக்கு நமது முன்னோர்களையும் ,பழங்கால இந்துப் பண்பாட்டையும் குற்றம் சொல்வது வழக்கமான நிலையில்,அத்துடன்அநாவசியமான, லாகிரி வஸ்துக்கள்(போதைப் பொருட்கள்)சேர்த்துச் சாப்பிட்டால் ஏன் சொல்ல மாட்டார்கள்?
வெற்றிலையுடன் சேர்க்கும் பாக்கு,புகையிலை போன்றவற்றால் தான் உடலுக்கு கெடுதல் உண்டாகும் என்று டாக்டர் கமலா க்ருஷ்ணசாமி கூறுகிறார்.இவர் இந்திய ஊட்டச்சத்து சொசைட்டியின் தலைவர்.மேலும் இவர்,வெற்றிலையிலிருந்து கால்சியம்,இரும்பு போன்ற சத்துக்கள் கிடைக்கின்றன.இது நம்மை குடல் பூச்சிகளிலிருந்து காப்பாற்றுகிறது.
வெற்றிலை வெறும் வெற்று இலை அல்ல; “கர்ப்பப்பை வெப்ப இலை” என்பது மருவி(பேச்சு வழக்கில் மாறி) கருவேப்பிலை என்று மாறியதுபோல்,இதுவும் வெற்றுஇலை என்றுபரப்பப்படுகிறது. ஆனால்,வெற்றிலை பல அரிய மருத்துவகுணங்கள் கொண்ட ஒரு மூலிகைஆகும்.சமஸ்க்ருதத்தில் ‘நாகவல்லி’ எனப்படும் இது ஆயுர்வேதத்தில் பலவாறாக உபயோகமாகிறது.
மலேஷியாவில் தலைவலி,மூட்டுவலி இவற்றுக்கு வெற்றிலையை மருந்தாக உபயோகிக்கிறார்கள்.சீனாவில் இதன் வேரை அரைத்து, உப்பைச் சேர்த்து பல்தேய்க்கிறார்கள்.பல்வலி பறந்து போகிறதாம். பல் தொடர்பான தொல்லைகள் வருவதில்லையாம். இந்தோனேஷியாவில் இருமல்,ஆஸ்த்மா இவற்றை சரி செய்ய வெற்றிலைபோடுகிறார்கள்.வெற்றிலையை டீயாகவும் குடிக்கிறார்கள். வெற்றிலைடீயை குடிப்பதால்,உடல் துர்நாற்றம் போய்விடுகிறதாம். சிலர் வெற்றிலைச் சாறு எடுத்து,எலுமிச்சம்பழச் சாற்றுடன் சேர்த்து உடலில் சொட்டு தடவிக்கொள்கிறார்கள்.இது ஒரு இயற்கையான ‘ஆண்டி பயோடிக்”ஆகும். இது இந்தோனோஷியப் பெண்மணி ஒருவர் வெற்றிலைத் தோட்டத்திற்கு செடி வாங்க வந்த போது பகிர்ந்து கொண்ட தகவல்!!!
கொல்கொத்தா பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் வெற்றிலை ‘செல் டேமேஜ்’ ஆவதைத் தடுக்கிறது என்று கண்டுபிடித்து ள்ளார்கள். வயது வந்தவர்களுக்கு உடலில் கால்சியம் குறைவதால், பற்கள்,எலும்புகள் வலுவிழக்கின்றன.அவர்களுக்கு கால்சியம் தேவை.அதனால் அவர்கள் வெற்றிலை போடுவது நல்லது. மகளிர்க்கு 50 வது வயதில் ஏற்படும் மாறுதல்களில் நிறைய கால்சியம் விரயமாகிறது.அதை ஈடுசெய்ய இது அரிய வரப்பிரசாதம்.மருத்துவர் மாத்திரை எழுதிக்கொடுக்கிறார். ஆனால்,அதுவெற்றிலைக்கு ஈடாகாது.அதனால்,அவர்கள் தினம் மூன்று முறை வெற்றிலை போட சிபாரிசு செய்கிறார்கள்.இல்லாவிடில் ரத்தத்தில் ஏற்பட்ட இழப்பை சரி செய்யஎலும்புகளிலிருந்து எடுத்துக் கொள்கிறது. ‘போன் மினரல் டென்சிடி’ குறைந்து எலும்புகள் பலம் குன்றி அநேக பிரச்னைகள்.
இது இருமலுக்கு நல்ல மருந்து. வெற்றிலைச் சாற்றில் வெல்லத்தைப் போட்டு ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்தால் இருமல் போய்விடும்.துளசிச்சாற்றையும் கலந்து குடித்தால் இன்னும் நல்லது.வெற்றிலைச் சாற்றைப் பிழிந்து அதனால் வாய் கொப்பளித்தால் ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல் போன்றவை போய்விடும்.சீனா, ஜப்பன் போன்ற நாடுகளில் வெற்றிலையை வாயில் போட்டு மென்று விட்டுச் சக்கையைத் துப்பி விடுகிறார்கள். இதனால் வாய்துர்நாற்றமும்போய்விடுகிறது.
இதில் உள்ள ‘செவிகால்’ என்கிற ரசாயனம் இயற்கையான ஆண்டிசெப்டிக்.அது புண்,தீப்புண்களை ஆற்றுகிறது.வெற்றிலையை அரைத்து,மஞ்சள் கலந்து பற்றுபோட்டபின்,வெற்றிலையால் மூடி ‘பேண்டேஜ்’ கட்டிவிட்டால்குணமாகிவிடும்.வெற்றிலைகளை வாட்டி,கடுகு எண்ணெயில் தேய்த்து, படுக்கும் முன் கொப்புளத்தின் மேல் சுற்றி துணியைக் கட்டிவிட்டால் மறுநாள் காலை நீர் வடிந்து குணமாகும்.இதில் உள்ள யூஜினல் சில வகை கொலோன் கேன்சர் செல்களை அழிக்கும் திறன் கொண்டது என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.
வெற்றிலையில் சிறிது சுண்ணாம்பு தடவி,கால் தேக்கரண்டி சோம்பு,கசகசா,கொப்பரை,சொட்டு ரோஜா எசன்ஸ்,புதினா ஆகியவை சேர்த்துச் சாப்பிட்டால் ஆரோக்கியமாகவும் இருக்கலாம் ,வேறு ‘மவுத் ஃப்ரஷ்னர்’வேண்டாம்.
சிறுநீர் கழிப்பதில் உள்ள பிரச்னைகள் எல்லாம் அகன்றுவிடும். மூளை களைத்துப்போகிறதா? பலவாறான கேள்விகள் உங்களை அயரவைக்கின்றனவா? தலைவலி மண்டையைப் பிளக்கிறதா? வெற்றிலைச் சாறு எடுத்து நெற்றியில் தடவுங்கள்.தலைவலியும் போகும்;மனமும்குளிர்ந்துவிடும்; வெற்றிலை போடுவதால் மூளை வலுவாக வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சுவையான பந்திச்சாப்பாட்டைக் கழுத்துவரை நிரப்பிவிட்டீர்களா? ஒரு வெற்றிலையை மென்று முழுங்கிவிடுங்கள்.சிரமம் குறையும்.அதற்காக அளவுக்கு மீறி உண்ணாதீர்கள்.
குழந்தைக்கு சளியினால் மூச்சுத்திணறல் இருந்தால் கொஞ்சம் சூடான கடுகு எண்ணெயில் வெற்றிலையை நனைத்து குழந்தையின் மார்பின் மேல் போடுங்கள்.கொஞ்ச நேரத்தில் குழந்தை சுலபமாக மூச்சுவிடும்.சிலருக்கு அவ்வப்போது மூக்கில் ரத்தம் வரும்.வெற்றிலையைச் சுருட்டி,மடித்து எண்ணெய் வரும்படி நசுக்கி மூக்கில் வைத்துக் கொண்டால் ரத்தம் வருவது நின்று போகும்.
மலேஷியாவில் ஆர்த்திரைடிசுக்கு வெற்றிலை மூலமே சிகிச்சை செய்கிறார்கள்.கர்ப்பிணிகளுக்கு கால்சியம் அதிகம் தேவைப் படுகிறது. அவர்கள் தினமும் நான்கு அல்லது ஐந்து வெற்றிலைகளைச் சாப்பிட்டு வந்தால் நல்லது.மாத்திரைகளை விட பால்,தயிர், நல்லெண்ணெய், வெற்றிலை இவற்றிலிருந்துகால்சியத்தை உடல் சுலபமாக ஏற்றுக்கொள்கிறதாம்.
இதில் உள்ள அரிய பல ஊட்டச்சத்துக்களின் காரணமாக இதை ‘பசுமையான தங்கம்’ என்று அழைக்கிறார் குஹா என்னும் ஆராய்ச்சியாளர்.இதயத்தை வலுப்படுத்துதல்,ரத்தநாளங்களின் வளர்ச்சி,நீரிழிவு கண்ட்ரோல் ஆகிய அபூர்வ குணங்களைக் கொண்ட இந்த மூலிகை வயதானவர்களுக்கு அத்தியாவசியமான ஒன்று. அவர்களுக்கு வெற்றிலைப் பெட்டி அடையாளச் சின்னமாக அவதாரம் எடுத்ததற்கு இதுதான் காரணம்.
இத்தனை உயரிய மருத்துவ குணங்காளைக் கொண்ட இந்த மூலிகை வெற்று இலையா? வெற்றிலையா? ‘கடவுள் ஓர் அற்புதமான மூலிகையைக் கொடுத்தார்;அதற்கு தனது இதயத்தின் உருவத்தையே கொடுத்தார்!!!’ என்கிறார்கள் வெற்றிலை ஆராய்ச்சியாளர்கள்.
.......கற்ப மூலிகை வெற்றிலை..!நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும் நோயின்றி காக்கும் தன்மை கொண்டதுதான் கற்ப மூலிகை.
கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.
வெற்றிலை தொன்றுதொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது.
வெற்றிலையை உபயோகிக்கும் முறை:
வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்.
வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.
தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.
வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.
நுரையீரல் பலப்பட:
வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.
வயிற்றுவலி நீங்க:
2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைத்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடுநரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக்கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மாந்தம் குறையும்.
சர்க்கரையின் அளவு கட்டுப்பட:
வெற்றிலை – 4
வேப்பிலை – ஒரு கைப்பிடி
அருகம் புல் – ஒரு கைப்பிடி
சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்ற வைத்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.
விஷக்கடி குணமாக:
உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமான வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.
இருமல் குறைய:
வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும்.
அஜீரணக் கோளாறு அகல:
வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர் களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
தோல் வியாதிக்கு:
100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும்.
தலைவலி நீங்க:
வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.
தீப்புண் ஆற:
தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.
பிற உபயோகங்கள்:
வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.
தேள் கடி விஷம் இறங்க வெற்றிலைச் சாறை அருந்தியும், கடிவாயில் தடவி வந்தால் விஷம் எளிதில் நீங்கும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும். புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு. வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.
No comments:
Post a Comment