ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹபெரியவாளைததரிசிக் க வந்தார். மனம் குளிரும்வண் ணம் அவரது தரிசனம் முடிந்த பி றகு, சற்றே நெளிந்தவாறு நின்றா ர்.
இவரது மனதில் ஏதோ கேள்விஇழையோடு கிறது போலும் என்று தீர்மானித் த பெரியவா,
“என்ன சந்தேகம். கேளுங்கோ” என் றார்.
அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ் சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெ டு நாட்களாகவே இருந்து வந்தது.
இதுகுறித்துப் பலரிடமும் விளக் கம் கேட்டு விட்டார். ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை. அவர், அந்த சந்தேகத் தை மஹாபெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான், ஸ்வ ாமிகளே உத்தரவு கொடுத்து விட்டா ர்.
“ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…” இழுத்தார் அன்பர்.
“வாயுபுத்திரனைப் பத்தியா… கேளே ன்” என்றார் ஸ்வாமிகள்.
“ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கு ம் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள்பெ றுகிறார்கள். ஆனால் அவருக்கு அணி விக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….”
பெரியவா மெளனமாக இருக்கவே… அன் பரே தொடர்ந்தார்: “அனுமனுக்குத் தென்னிந்தியாவி ல் காரமானமிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வ சிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கி ரி மாலைசாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?”
பதிலுக்காக மஹபெரியவாளையே பார் த்துக் கொண்டிருந்தார் வட நாட் டில் இருந்து வந்த அன்பர்.
தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத் துக்கு, பெரியவாளிடம் இருந்தா வது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது.கேள்வி கேட்ட வட நாட் டு அன்பர் மட்டுமல்ல… பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அன் று அங்கு கூடிஇருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.
ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெ ரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார் .
“பெரும்பாலோர் வீட்டில் கைக்கு ழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே க ுழந்தையை இடுப்பில் தூக்கிக் கொ ண்டு வந்து,‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தை க்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள்.
அழகான நிலாவையும் வெளிக்காற்றை யும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் . சம்பந்தப் பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத் தைத் தரும். உங்களில் பலர் வீ டுகளிலும் இது நிகழ்ந்திருக்கு ம்.
சாதாரண குழந்தைகளுக்கு நிலா வி ளையாட்டுப் பொருள் என்றால், ரா மதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அது வும் எப்படி ? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனைஅடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.
இப்போது மிளகு வடை மற்றும் ஜாங் கிரி விஷயத்துக்கு வருகிறேன்.
அனுமன் கைக்குழந்தையாக விளையாடி க் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம்போல்‘ஜிவுஜிவு’ என்று தோற் றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரி யனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா ? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார்.
வாயு வேகத்தில் வானத்தில் பறந் தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு
பச்சிளங்குழந்தை,சூரியனையே விழு ங்குவதற்காக இப்படிப் பறந்து செ ல்வது கண்டு தேவர்கள் திகைத் தனர்.
வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடி யவில்லை.
அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூ ரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொ ண்டிருந்தது. ஆனால், அனுமன் செ ன்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை.
சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். இந்த நிகழ்ச்சியின் மு டிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகா ரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு
மிகவும்உகந்த தானியமான உளுந்தா ல் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறா ரோ ,அவரை எந்தக் காலத்திலும் தா ன் பீடிப்பதில்லை எனவும், தன்னா ல் வரும் தோஷங்கள் அனைத்தும் நி வர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்கவே ண்டும் என்றும் ராகு பகவான் அனு மனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினா ல் ஆன மாலைகளாகத் தயாரித்து அனு மனுக்கு சமர்ப்பிக்கிறோம்.
ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப் பட்டிருப்பவர் உளுந்து தானியத் தால்
ஆனவடை மாலைகளை அனுமனுக்குச் சா ர்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது
இதில்இருந்து தெரிக ிறது.
இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்
வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டு ம். இரண்டுமே உளுந்தினால் செய் யப்பட்டவை தான். தென்னிந்தியாவி ல் இருப்பவர்கள் அனுமனுக்கு உளு ந்து வடை மாலை சாற்றுகிறார்கள்.
இங்கேஉப்பளங்கள் அதிகம் உள் ளன. இங்கிருந்து பல வெளி நாடு களுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும்
கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து,அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதி கம் உண்டு.
வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இரு க்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெ ல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண் டங்களை அதிகம் விரும்பிச் சாப் பிடுபவர்கள்.
அதுவும், அவர்களுக்குக் காலை நே ரத்திலேயே —அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையி ல் இனிப்புப் பண்டங்களையும் ரெ குலர் டிஃபனோடு சேர்த்துக் கொள் வார்கள். அவர்கள் இனிப்பு விரு ம்பிகள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சாரதி வழிபடுகிறார் கள்.
எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந் து மாலைகள் அனுமனுக்கு விழுந்துகொண்டே இரு க்கின்றன. அது உப்பாக இருந்தா ல் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன.. மாலை சார்த்திவழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலை ந்து போனால் சரி” என்று சொல்லி விட்டு, இடி இடியெனச்சிரித்தா ர் மஹபெரியவா. பெரியவாளி விளக் கமான இந்த பதிலைக் கேட்ட வட நா ட்டு அன்பர் முகத்தில் பரவசம். சடாரெ னமகானின திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியை த் தெரிவித்தார். கூடி இருந்த அநேகபக்தர்களும் பெரியவாளின் வி ளக்கத்தால் நெகிழ்ந்து போனார் கள்.
No comments:
Post a Comment