சின்னக் குழந்தை வெண்ணிலவைப் பார்த்து கேட்டது,
வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா?
என் வீட்டில் தஞ்சம் புகுவாயா?
வெண்ணை கொண்டு தருவாயா?
விட்டில் பூச்சி பிடிப்பாயா?
* * *
ஜனங்கள் இரவு பகல் பார்க்காமல் எல்லாமே ஒரே போல் செய்கிறார்களே, பிறகென்ன, நீ தனி நான் தனி ?
நாம் என் ஒன்று சேரக் கூடாதுன்னு?
இரவு பகலைப் பார்த்து கேட்டது.
* * *
மயக்கும் மாலை பொழுதில்,
அருகில் நீ இருந்தால்,
இனிக்கும் இன்ப இரவில்
அவள் இருந்து போகட்டுமே?
* * *
கடவுளிடம் முறையாட போனேன்,
ஆனால் அங்கு கண்ட காட்சியோ வேறு.
என்னை மெய் மறந்து நின்றேன்,
ஆஹா!கல்யாணக் கோலத்தில்
முருகனும் வள்ளியும்,
விடைக் கிடைத்தது வேறென்ன ,
இரண்டாம் கல்யாணக் கொட்டு மேளம் தான்!
* * *
மயக்கும் மாலை பொழுதில் ....-இது எப்படி இருக்கு?
ReplyDeleteஇரவும் பகலும் ஒண்ணா ஆயிட்டா அப்புறம் வாலி,வைரமுத்து எல்லாம் கடையை இழுத்து மூட வேண்டியதுதான்.
கடவுளிடம் முறையாட....-இப்படித்தான் நாட்டுல ஜனங்க பண்ற எல்லா தப்புக்கும் கடவுளை உதாரணம் காட்டுறாங்க .ஆமா,அது என்னமோ ஜலக்கிரீடைன்னு ஏதோ ஒன்னு கிருஷ்ணா பரமாத்மா பொண்ணுங்களோட விளையாடினாராமே ...ஒய்யா ஓய் அது என்னா ஓய் ?
Re: கரை மேல் தெறித்த அலைத் துளிகள்-7
ReplyDeletehttp://www.indusladies.com/forums/showthread.php?t=142655#post1903931
Posted by: devapriya
On: 7th August 2011 09:54 PM
அது அதற்கென்று ஒரு நேரம் காலம் இருக்கிறது என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா மாதங்கி? :rotfl
என் சிறு வயதில்
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகை பூ கொண்டு வா என்று தமிழில் ரைம் ஒன்று படித்தேன்....அது தான் ஞாபகம் வந்தது.
நன்றி மாதங்கி!!!!